குவைத்தில் இந்தியா ஃப்ரடர்நிட்டி ஃபாரம் (KIFF) சார்பாக கடந்த
06-12-2013 வெள்ளிகிழமை அன்று குவைத் ஜமியதுல் இஸ்லாஹி அரங்கத்தில்
மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாலை 6.45 மணிக்கு மௌலவி சம்சுதீன்
திருக்குரான் ஓதி நிகழ்ச்சியை இனிதே
துவங்கிவைத்தார். குவைத் இந்தியா ஃப்ரடர்நிட்டி ஃபாரம் (KIFF)-ன் தமிழ்
பிரிவு செயலாளர் உஸ்மான் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்
, அதை தொடர்ந்து பொதுக்கூட்டத்தை தலைமை பொறுப்பேற்று நடத்திய குவைத் இந்தியா ஃப்ரடர்நிட்டி ஃபாரம் (KIFF)-ன் தமிழ் பிரிவு தலைவர் ராஜிக் ரஹ்மான் தலைமை உரை நிகழ்த்தினார்.
, அதை தொடர்ந்து பொதுக்கூட்டத்தை தலைமை பொறுப்பேற்று நடத்திய குவைத் இந்தியா ஃப்ரடர்நிட்டி ஃபாரம் (KIFF)-ன் தமிழ் பிரிவு தலைவர் ராஜிக் ரஹ்மான் தலைமை உரை நிகழ்த்தினார்.
அதை தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
“முஸ்லிம்களின் இந்திய அரசியல் நிலை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய
சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா (SDPI)-யின் மாநில தலைவர் K.K.S.M
தெஹ்லான் பாகவி அவர்கள் தனது எழுச்சி உரையில் பாபரி மஸ்ஜித் இடிப்பு அதன்
சூழ்ச்சியின் பாசிச பின்னனியை தோலுரித்து காட்டினார். இந்திய முஸ்லிம்களின்
அரசியல் அவலநிலைப்பற்றி எடுத்துரைத்த தலைவர், இந்திய முஸ்லிம்கள்
அரசியலில் வலிமை பெறுவதின் அவசியத்தையும், நமது இந்திய தேசத்திற்கு பாசிச
இந்துத்துவவாதிகளால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை எதிர்கொண்டு, தலித்களையும்,
சிறுபான்மையினர்களையும், ஒட்டு மொத்த இந்தியர்களையும் பாதுகாப்பது நமது
கடமை என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். அதை தொடர்ந்து பொதுமக்களின் அனைத்து
கேள்விகளுக்கும் SDPI-யின் மாநில தலைவர் K.K.S.M தெஹ்லான் பாகவி அவர்கள்
விளக்கம் அளித்தார்கள். இறுதியாக சகோதரர். சிக்கந்தர் அவர்களின்
நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. சகோதரர். அம்ஜத் அவர்கள்
நிகழ்ச்சி முழுவதையும் தொகுத்து வழங்கினார்.
குவைத் இந்தியா ஃப்ரடர்நிட்டி ஃபாரம் (KIFF) தமிழ் பிரிவு ஏற்பாடு செய்த
இப்பொதுக்கூட்டத்தில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு
பயன் பெற்றனர். குவைத் இந்தியா ஃப்ரடர்நிட்டி ஃபாரம் (KIFF) பல்வேறு நல
பணிகளை செய்து வருவது குறிப்பிட்தக்கது.
No comments:
Post a Comment