லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் பெண்கள் கல்வி விழுப்புணர்வு கூட்டம்; மவ்லானா பாலக்காடு சிராஜுதீன் மன்பஈ பங்கேற்பு .
லால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக் கல்லூரியில் நகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் பெண்கள் கல்வி விழுப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது . பெண்கள் அரபுக் கல்லூரி தலைவர் மவ்லானா ஏ.ஃபைஜுர் ரஹ்மான் மதனி தலைமை வகித்தார். மவ்லானா ஏ.ஃபாரூக் ஹஜ்ரத் அவர்கள் கிராஅத் ஓதினார்.
முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் முத்தவல்லி எம்.ஒ.அப்துல் அலி முன்னிலை வகித்தார்.
முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் முத்தவல்லி எம்.ஒ.அப்துல் அலி முன்னிலை வகித்தார்.
நகர ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் ஜாக்கிர் ஹுசைன் ஹஜ்ரத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள் .
பாலக்காடு சிராஜுதீன் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் .
மவ்லானா தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள் .
முபாரக் பெண்கள் அரபுக் கல்லூரி செயலாளர் எஸ்.ஏ.தாஹா முஹம்மது நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி எஸ்.எம்.ஹிப்பத்துல்லா, மவ்லானா ஹம்மாது மதனி
, மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளர் மவ்லானா சலாஹுதீன், மவ்லானா முஹ்சீன்
, மவ்லானா ஜமால் அஹமத் மவ்லானா , முஹம்மது அன்வர் மற்றும் திரளான பெண்கள் பங்கேற்றனர்
No comments:
Post a Comment