அஸ்ஸலாமு அலைக்கும் **

Saturday, November 8, 2014

லால்பேட்டை அருகே பரபரப்பு ஆட்டோவில் குழந்தைகள் கடத்தல்?

லால்பேட்டை அருகே குழந்தைகளை ஆட்டோக்கள் மூலம் கடத்துவதாக பரவிய தகவலால் பெற்றோர்கள் பீதியில் உறைந்துள்ளனர். இச்சம்பவம் உண்மையா, பொய்யா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லால்பேட்டை அருகே ஜாக்கிர் ஹுசேன் நகர் மா.கொளக்குடியில் நேற்று காலை குழந்தைகளை ஒரு கும்பல் கடத்தி அங்குள்ள வீட்டில் அடைத்து வைத்திருந்ததாகவும், அதில் இருந்து தப்பித்து வந்த ஒரு குழந்தை வீட்டிற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாட்டிக்கொள்வோம் என்ற பீதியில் அக்கும்பல் மற்ற குழந்தைகளை ஆட்டோவில் கடத்தி வேறு பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இத்தகவல் அப் பகுதியில் காட்டு தீ போல பரவியதால் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பு மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்த தகவலின் பேரில் காட்டுமன்னார்கோவில் எஸ்ஐ கதிரவன் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தைகள் கடத்தப்பட்டது உண்மைதானா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். உண்மையிலேயே குழந்தைகள் கடத்தப்பட்டார்களா அல்லது புரளியா என்பது போலீசார் விசாரணையில் முடிவில் தான் தெரியவரும். இருந்தபோதும் குழந்தைகளை மர்ம கும்பல் கடத்துவதாக பரவிய தகவலால் அப்பகுதியில் பரபரப்பு காணப் படுகிறது.

Thanks:-lalpet.net

No comments:

Post a Comment

Photobucket