அஸ்ஸலாமு அலைக்கும் **

Thursday, May 29, 2014

மல்லிப்பட்டிணத்தில் முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்-வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு வன்முறையாளர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை!

இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது….
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டிணத்தில் நேற்றிரவு இரு
சக்கர வாகனங்களில் வந்த 8 பேர் சாலையில் நின்று பேசி கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்களை கண்மூடித்தனமாகவும், வெறித்தனமாகவும் அரிவாள் கத்திகளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது நீங்கள் தானே தேர்தல் பிரச்சாரத்தின் போது எங்களை ஊருக்குள் வரவிடாமல் தடுத்தவர்கள் என்று சொல்லிய படியே தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த 4 இளைஞகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம்  வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறையும், தமிழக அரசும் கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இது போன்ற வன்முறையாளர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மல்லிப்பட்டிணத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க வேட்பாளர் முருகானந்தம் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர், முஸ்லிம்களுக்கு எதிராக பேசவும், செயல்படவும் கூடியவர். எனவே அவரை முஸ்லிம் பகுதிகளில் அனுமதித்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது  என முன்கூட்டியே காவல்துறையினரிடம் முஸ்லிம்கள் முறையிட்டும், மீறி அனுமதித்ததால் பெரும் கலவரம் ஏற்பட்டது. முஸ்லிம்களின் வாகனங்கள், கடைகள் தாக்கப்பட்டன. இந்த சம்பவத்தை காரணம் காட்டியே இந்த தாக்குதலும் நடைபெற்றுள்ளது.

மோடி பதவி பெற்றவுடன் தைரியம்  பெற்றுள்ள இது போன்ற வன்முறையாளர்கள் கர்நாடகாவிலும், குஜராத்திலும் நேற்று முன்தினம் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை மாதிரியாக கொண்டு மல்லிப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த வன்முறைக்கு காரணமானவர்களை உடனே கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Photobucket