
இதில் பேசிய எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி…
காமன்வெல்த்தின் அடிப்படை கொள்கைகளான அமைதி, சமத்துவம் ஆகிய கொள்கைகளுக்கு எதிரான ராஜேபக்சே ஆளும் இலங்கையில் காமன்வெல்த் கூட்டம் நடைபெற கூடாது என வலியுறுத்தினார். இது குறித்து தமிழக சட்டசபையில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, தி.மு.க தலைவர் கலைஞர் அனுப்பியிருந்த கடிதத்திற்கு, பிரதமர் மன்மோகன் சிங் தமிழக மக்களின் உணர்வுகள் கருத்தில் கொள்ளப்படும் என அளித்த வாக்குறுதிக்கு விரோதமாக இந்திய வெளிஉறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசியதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, இலங்கை தூதர் இந்தியா காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாவிட்டால் உலக நாடுகளில் இருந்து இந்தியா தனிமை படுத்தப்படும் என கூறியதற்கு அவர் மேல் இந்தியா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
தலைவர் A.சயீத், மனித உரிமை மீறல்கள், தமிழர்கள் மீதான இனவெறி தாக்குதல்களுக்காகவும் இலங்கை அரசு உலகின் கண்டன பார்வையில் உள்ளது. போர் குற்றங்களுக்கான விசாரணையை ஐ.நா வின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் அறிக்கையின் அடிப்படையில் எதிர் நோக்கி உள்ள இலங்கையை காமன் வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும். இதற்கு முன் இது போன்ற காமன்வெல்த் தத்துவங்களை பின்பற்றாத பிஜி தீவுகள், தென் ஆப்ரிக்க மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நீக்கி வைக்கபட்டுள்ள முன் மாதிரிகள் உள்ளதை சுட்டி காட்டினார்.
No comments:
Post a Comment