கோவை மத்திய சிறையில் சுமார் பதினைந்தாண்டுகாலத்திர்க்கும் மேலாக
சிறைபட்டுள்ள சிறைவாசி அபுதாகிர் அவர்கள் இவர் எஸ்.எல்.இ. என்கிற
வியாதிக்கு ஆளாகி தனது வாழ்நாளின் விளிம்பில் நின்று கொண்டு
இருக்கிறார் காரணம்
இவரது இரு சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டன.நடக்கும்
சக்தியையும் இவரது கால்கள் இழந்து வருகிறது. கண் பார்வை பெரும்பான்மையாக குறைந்துவிட்டது.அபுதாகிரை பெயிலில் விடசொல்லி உயர்நீதிமன்றம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாகவே உத்தரவு பிறப்பித்துள்ளது ஆனால் சிறை நிர்வாகம் அந்த நோயாளியை குறைந்தபட்ச மனிதாபிமானம்கூட இல்லாமல் பெயிலில் விட
மறுத்து வருகிறது.
ஆம் நாம் ஜனநாயகத்தை மதிக்கும் மக்கள் நம்மால் அதைதானே செய்யமுடியும்.!!!
ஆனால் அந்த ஜனநாயக போராட்டம் அரசின் கவனத்தை தட்டை எழுப்ப வேண்டும் என்ற
நோக்கத்தோடு அமைப்புகள் ,இயக்கங்கள் சார்பாக கோவை செஞ்சுலுவை சங்கம்
முன்பு 30.11.2012 மாலை 4.30 மணிக்கு கண்டன ஆர்பாட்டம் நடைபெற இருக்கிறது
இந்த ஆர்பாட்டத்திற்கு அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.அனைத்து
முஹல்லாஹ் ஜமாத்துக்களும் இப்போராட்டத்தில் கைகோர்க்க வேண்டும்...அநியாயமாக
சிறைபட்டவனை மீட்க்க போராடுவது ஈமானிய கடமை... சாமானிய மக்களான நமக்கு
வல்ல அல்லாஹுவின் துணை எப்போதும் உண்டு. இம்மனிதநேய போராட்டத்தில்
தமிழுணர்வாளர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment