அஸ்ஸலாமு அலைக்கும் **

Sunday, January 4, 2015

முத்துப்பேட்டை தர்கா தாக்குதலில் துணிச்சலுடன் செயல்பட்ட சப் இன்ஸ்பெக்டர்.. பாராட்டு குவிகிறது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜம்புவானோடை தர்காவில் ஏற்பட்ட கலவரத்தின்போது 150 -க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தர்கா மீது தாக்குதல் நடத்தியபோது தனி ஆளாக இருந்து தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கலவரக்காரர்களை விரட்டியடித்துள்ளார் சப் இன்ஸ்பெக்டர் சாமிநாதன்.அவரது செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்ட்டது. இதையடுத்து சாமிநாதனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.வன்முறையாளர்களை தனி ஆளாக எதிர்கொண்டு அவர்களை அங்கிருந்து திருப்பி அனுப்பியுள்ளார் சாமிநாதன். இது அப்பகுதி மக்கள் மட்டுமின்றி அனைத்து பொதுநல அமைப்பினரின் பாராட்டுக்களையும் வாரிக் குவித்துள்ளது.இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறுகையில் பாதுகாப்பு கவசங்கள் அப்போது என்னிடம் இல்லை. இருந்திருந்தால் இந்த அளவுக்குக் கூட தாக்குதல் நடந்திருக்காமல் தடுத்திருப்பேன் என்றார்.

No comments:

Post a Comment

Photobucket