பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பில் 17/2/2014 அன்று
இராமநாதபுரத்தில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தின பேரணியில் பொதுமக்கள்
மீது காவல்துறையின் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து இன்று 18/2/2014
மாலை 4.30 மணியளவில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியாவின் சென்னை மாவட்டம்
சார்பில், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை மாவட்ட
தலைவர் நாகூர் மீரான் அவர்கள் தலைமை தாங்கினார். பெண்கள் மற்றும்
குழந்தைகள் என்று கூட பாராமல் பாப்புலர் ஃப்ரண்ட் தின பேரணியில் கலந்து
கொண்ட பொது மக்கள் மீது லட்டி சார்ஜ் செய்த காவல் துறையின் அராஜக போக்கை
கண்டித்து கோஷம் எழுப்பபட்டது. இந்த கண்டன ஆர்பாட்டத்தில் பல்வேறு இயக்க
தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு இந்த தாக்குதலில்
சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி மாநில
அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பொது
மக்கள் கலந்து கொண்டு காவல் துறைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு
செய்தனர்.Tuesday, February 18, 2014
இராமநாதபுரத்தில் பிப்ரவரி 17 பாப்புலர் ஃப்ரண்ட் தின நிகழ்ச்சியில் காவல்துறையின் கொலைவெறி தாக்குதலை கண்டித்து சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment