அஸ்ஸலாமு அலைக்கும் **

Thursday, June 20, 2013

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் ரூபாய் 50,000 நன்கொடை!

150ஆம் ஆண்டு விழாவை கொண்டாட இருக்கும் நமதூர் ஜாமிஆ மன்பவுல் அன்வாருக்கு அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் ரூபாய் 50,000  நன்கொடை!

சரித்திர சாதனை படைத்து, மென்மேலும் பல சாதனைகள் புரிய இருக்கும், லால்கான்
மண்ணின் மைந்தர்களின் மகத்தான உணர்வுடன் இரண்டற கலந்து சுவாசமாக விளங்கும் நமதூர் ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் 150ஆம் ஆண்டு விழா மாநாடு போல் வரும் ஜுன் 22, 23 தேதிகளில் நடைபெற இரண்டொரு தினங்களே இருக்கும் நிலையில், இவ்விழா சீரோடும், சிறப்போடும் நடைபெற அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் அனுப்பப்பட்ட ரூபாய் 50,000 நன்கொடையை ஜாமிஆவின் செயலாளர் அல்ஹாஜ் பி.ஏ. மஹம்மது எஹ்யா மற்றும் ஜாமிஆவின் பொருளாளர் அல்ஹாஜ் எஸ். ஜாபர் அலி அவர்களிடம், அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் அதன் துணைத் தலைவர் பி. ஹெச். முஹம்மது ஆதம், செயலாளர்கள் வி.ஏ. அப்துல் ரஹீம் (நஸீம்) – எம். எல் சாதிக் அலி ஆகியோர்களால் 19.06.2013 புதன்கிழமை காலை ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

150ஆம் ஆண்டு மலரை தொடர்ந்து உருவாக்கப்பட்ட இணைப்பு மலரில், விழாக்கோலம் காண இருக்கின்ற ஜுன் 22, 23 தேதிகளில் வெளியிட ஜமாஅத் சார்பில் வாழ்த்துரை மற்றும் ஜமாஅத்தினை பற்றிய சிறு அறிக்கையும் கொடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இன்ஷா அல்லாஹ் அவைகள் யாவும் லால்பேட் வெப் சைட்களிலும் வெளியிடப்படும் என்பதை மகிழ்வுடன் தெரியப்படுத்தி கொள்கிறோம்.

இங்ஙனம்

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்

No comments:

Post a Comment

Photobucket