கோவை:சமூக மாற்றத்தை ஏற்படுத்த மிகப்பெரிய
விழிப்புணர்வு தேவைப்படுகிறது என்று சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப்
இந்தியா கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கூறியுள்ளார்.
கோவையில் நேற்று முன் தினம்(30.03.2013)
அன்று நடைபெற்ற எஸ்.டி.பி.ஐயின் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில்
அக்கட்சியின் முன்னாள் தேசிய
தலைவரான இ.அபூபக்கர் அவர்கள் ஆற்றிய உரையில்
கூறியதாவது: 65 ஆண்டுகளுக்கு முன்னால் நள்ளிரவில் நமக்கு சுதந்திரம்
கிடைத்தது.ஆனால், இன்று நள்ளிரவு மட்டுமே தனி மனிதனுக்கு சுதந்திரம்
உள்ளது. சுதந்திரமாக பசித்திருக்க மட்டுமே முடியும் இன்றைய மனிதனுக்கு.
ஒவ்வொரு மனிதனின் தேவைகள் மட்டுமே அதிகரித்து கொண்டிருக்கிறது. தேவையில்லை
என்ற நிலை ஒரு போதும் இல்லை.
ஊழல் என்பது இன்று அனைத்து இடங்களிலும்
புரையோடிக் கிடக்கிறது. மனிதனின் இயல்பையே இன்று ஊழல் மாற்றி விட்டது. ஒரு
பொது மனிதனால் இன்று அடிக்கப்படும் கொள்ளையின் அளவை கூட கணக்கிட முடியாத
அளவிற்கு பெரிய அளவில் உள்ளது. 2ஜி அலைகற்றை மற்றும் நிலக்கரி ஊழல்கள் ஒரு
எடுத்துக்காட்டு.
துரதிஷ்டவசமாக இன்றைய ஆட்சியாளர்கள்
மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதிலே கவனம் செலுத்து கிறார்கள். இவ்விஷயத்தில்
மட்டும் இடது சாரிகள் வலது சாரிகள் என்று எந்த பாகுபாடும் கிடையாது.
காங்கிரஸ் ஆகட்டும் அல்லது பாரதீய ஜனதா கட்சியாகட்டும் ஊழல் விஷயத்தில் ஒரே
நிலைபாடு தான். மத்திய மற்றும் மாநில அரசுகள் தேசத்தில் வளங்களை சுரண்டி
தனியார்களுக்கு தாரை வார்த்து கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களை
திருப்திபடுத்திட சொந்த குடிமக்களை அவர்களது பகுதியிலிருந்து
விரட்டியடிக்கிறார்கள். ஒரிசாவிலும் ஜார்கண்ட்டிலும் ஆதிவாசிகளின் நிலங்களை
அங்கு கிடைக்கும் இயற்கை கனிம வளங்களை சுரண்டுவதற்காக அவர்களது
நிலப்பகுதியை பதம் பார்க்கிறார்கள். இதற்கு எதிராக போராடுபவர்களை மவோயிஸ்ட்
என்று முத்திரை குத்தி அவர்களது நெஞ்சை குண்டுகளால் பதம் பார்க்கிறார்கள்
காவல் துறை மற்றும் பாதுகாப்பு படையினர்.
அணை கட்டுகிறோம், மின் உற்பத்தி
செய்கிறோம் மற்றும் சாலை வசதி செய்கிறோம் என்ற பெயரில் நர்மதா ஆற்றங்கரை,
கூடங்குளம் போன்ற பகுதிகளில் உள்ள ஏழை மக்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள்.
இங்ஙனம் ஒரு நவீன காலனியாதிக்க சக்திகளால் எந்த போரும் இல்லாமலும் கத்தியோ
ஆயுதமோ இல்லாமலும் கொடூர சட்டங்கள் இல்லாமலும் நாம் அடிமை
படுத்தப்படுகிறோம். ஒரு சில தவறான யுக்திகளால்நம் நாட்டில் முழுவதுமாக
ஊடுறுவி நமது வளங்களை தொடர்ந்து கொள்ளையடிக்கிறார்கள்.இது நமது
சட்டங்களையும் நாம் வகுத்த வழிமுறைகளையும் பயன்படுத்தியே நம்மை அடிமை
படுத்திட பின்பற்றப்படும் ஒரு நவீன யுக்தியாகும்.
நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தி
தனிமைபடுத்தி வருகின்றனர். நமது நாட்டை ஆளுவதோ ஒரு சிறு கூட்டம் தான். இந்த
நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய தலீத்கள் முஸ்லிம்கள் ஆதிவாசிகளோ ஒரு
பெரும் சுரண்டலுக்கு ஆட்படுத்தப்பட்டு வருகின்றனர். நாம் முஸ்லிம்களின்
நிலையினை பற்றி பல முறை விவாதித்து இருக்கிறோம். சச்சார் அறிக்கை மற்றும்
பல அறிக்கைகள் இந்நிலையை வெளிப்படுத்துகிறது. இந்த அறிக்கையெல்லாம் வெறுமனே
யதார்த்தமாகநடந்தவை அல்ல என்பதை நாம் நன்கறிவோம்.
சமீபத்தில் நடந்த ஹைதராபாத் குண்டு வெடிப்பிலும் கூட முஸ்லிம்களை மட்டுமே குறி வைக்கும் ஈன செயல் நடந்து வருகிறது.உளவு துறையும் ஹிந்துத்வா சக்திகளும் இணைந்து நாட்டை ஆட்டிபடைப்பது ஒன்றும் இரசியம் இல்லை. நமது அரசியல் வாதிகளோ முதுகெலும்பில்லாதவர்களாக அவர்கள் நடத்தும் ஆட்டங்களின் கதா நாயகர்களாக இருக்கிறார்கள்.
முஸ்லிம்களை குறிவைப்பது அரசும் காவல்துறையும் உளவு துறையும் மட்டுமே என்று நினைத்து விட வேண்டாம். நமது நாட்டின் மத சாற்பற்ற தன்மையையும் ஜனநாயகத்தையும் உற்று கவனித்து வரையரைபடுத்துவாக பறைசாற்றும் பத்திரிகையோ முஸ்லிம்கள் விஷயத்தில் வேட்டையாடும் மிருகங்களாக இருந்து வருகிறது.
அப்சல் குரு தூக்கிலடப்பட்ட விதம் நமது பார்வையை திறந்து விடுவதாக உள்ளது. பொது மக்களை திருப்தி படுத்துவதற்காகவே அப்சல் குரு தூக்கிலடப்பட்டார். வீரப்பன் கூட்டாளிகளை போன்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புக்கள் கூட அப்சல் குருவிற்கு கொடுக்காமல் நமது உள் துறை அமைச்சர் திரு.ஷின்டே தூக்கிலிட உத்தரவிட்டுள்ளார். யாருக்கு தெரியும் இதற்கு அடுத்து பொது மக்களை திருப்தி படுத்த யாரை கொல்லப்போகிறார்கள் என்று?
முஸ்லிம்களை போலவே தலீத்களும் குறிவைக்கப்படுகிறார்கள். சமூக ரீதியான பல் துன்பங்களை முஸ்லிம்களை போலவே அவர்களும் அனுபவித்து வருகிறார்கள். வேதங்கள்,ஸ்ருமிதிகள் மற்றும் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று பல நியமங்களையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி திட்டமிடப்பட்டு தலீத்கள் மீது பல அநீதிகளை இழைத்து வருகிறார்கள். இது போன்ற துன்பங்களை அனுபவித்த சமூகத்தை உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது. நாடெங்கும் தலீத்கள் வீடுகளும் தலீத் பெண்களின் மானமும் தொடர்ந்து சூரையாடப்பட்டு வருகிறது. ஒரு செத்த மாட்டின் அளவிற்கு கூட ஒரு தலீத்தின் உயிர் மதிக்கப்படுவதில்லை. ஆதிவாசிகளின் நிலையும் ஏறத்தாழ இதே நிலைதான்.
இந்நிலையில் தான் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்த ஒரு பெரிய அளவிலான
விழிப்புணர்வு தேவைபடுகிறது.சம நீதி, சமூக நீதி மற்றும் சம உரிமை யை பெற
வேண்டும் என்ற வேட்கையுடைய வேங்கைகள் ஆர்பரித்து எழ வேண்டும். எஸ்.டி.பி.ஐ
இந்த இலக்கை அடைய ஒரு நம்பிக்கையை விதைத்துள்ளது. எஸ்.டி.பி.ஐ ஒரு சூடான
ஜுவாலை. மக்களின் அழுகுரலுக்கும் கதறல்களுக்கும் அவர்களை திட்டமிட்டு
கழுவறுப்பதற்கும் பதில் கொடுக்கவே இந்த ஜுவாலை கிளம்பியுள்ளது. இது மக்கள்
தனது துன்பங்களை பற்றி எண்ணி எண்ணி நொந்து போய்விட வில்லை. மாறாக அந்த
அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்து உள்ளார்கள் என்பதையே பறைசாற்றுகிறது.
திராவிட மண்ணிலே திராவிடர்கள் அடிமையாகி கிடந்த காலம் மாறிவிட்டது என்ற
அறிகுறியே இந்த எழுச்சி. இந்த எழுச்சி ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த போகும்
நாள் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு இ.அபூபக்கர் தனது உரையில்
குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment