புதுடெல்லி:முஸ்லிம் அமைப்புகள்
ஒற்றுமையுடன் போராடியதன் விளைவாக தெற்கு டெல்லியின் மெஹ்ராலியில் உள்ள
கவுஸியா காலனியில் டெல்லி வளர்ச்சி ஆணையம் இடித்த மஸ்ஜித் மற்றும் வீடுகள்
மீண்டும் கட்டப்பட்டு வருகின்றன.
மஸ்ஜிதின் கட்டிடப் பணிகள் 90
சதவீதம் முடிவடைந்துவிட்டன. இடிக்கபட்ட வீடுகளை திரும்பவும் கட்டும் பணி
விரைவில் துவங்க உள்ளது. தற்போது தற்காலிக டெண்டுகளில் வீடுகளை இழந்த
முஸ்லிம்கள் தங்கியுள்ளனர்.
கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி எவ்வித
முன்னறிவிப்பும் இன்றி முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கெளஸியா காலனியில்
டெல்லி வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் புல்டோசரை பயன்படுத்தி வீடுகளையும், 400
ஆண்டுகால பழமையான மஸ்ஜிதையும் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து தள்ளினர்.
இதற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ கட்சி
தலைமையில் காலனி வாசிகளை ஒன்றுதிரட்டி கெளஸியா காலனி மறுவாழ்வு பேரவையை
உருவாக்கி போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளை
ஒன்றிணைத்து வக்ஃப் பச்சாவோ தெஹ்ரீக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஷாஹி
இமாம் டாக்டர் முஃப்தி முகர்ரம் அறங்காலவராகவும், எஸ்.டி.பி.ஐயின் தேசிய
பொதுச் செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் அலிகான் பொதுச்
செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
இவ்வமைப்பின் செயல்பாட்டினால்தான் மஸ்ஜித்
மீண்டும் கட்டுவதற்கான பணிகள் துவங்கின. மீண்டும் கட்டப்படும் கெளஸியா
காலனி மஸ்ஜிதுக்கு நேற்று முன் தினம் எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர்
இ.அபூபக்கர் சென்று பார்வையிட்டார்.
மஸ்ஜித் மீண்டும் கட்டி முடிக்கப்பட்டு
காலனி மக்களுக்கான மறுவாழ்வு பணிகள் முடிவடையும் வரை எஸ்.டி.பி.ஐ முழு
ஆதரவை அளிக்கும் என்று இ.அபூபக்கர் உறுதி அளித்தார். காலனிவாசிகளான
முஸ்லிம்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வையும், போராட்ட உறுதியையும்
இ.அபூபக்கர் பாராட்டினார்.
No comments:
Post a Comment